காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘மக்கள் செயற்பாட்டினூடாக பலமானதொரு அமைப்பை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (19.07.2016) வவுனியாவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந் நிகழ்வானது காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று திரண்டு அனைத்தினதும் நல்வாழ்வுக்காக பொது மக்கள் அதிகாரத்தை எவ்வாறு வலுப்படுத்த முடியும் அல்லது நிறுவ முடியும் என கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க ராஜபக்ச, செயலாளர் பி.ஆர்.ஜெயதிலக அமைப்பின் உறுப்பினர் உப்பாலி மற்றும் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் விவசாய அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

















