சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை!!

1211

Marana thandanai

கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2006ம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி அகுரஸ்ஸ – வல்பிட பகுதியில் 50 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 35 மற்றும் 33 வயதான சகோதரர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மத்தறை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதித்து இன்று நீதிபதி, தமிக் தோடவத்தை தீர்ப்பளித்தார்.