வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் கடந்தவாரம் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் S.சிந்துஜன் 10.62 மீட்டர் தூரத்திற்கு எறிந்து முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் சி.ஜெனோயன் 10.02 மீட்டர் தூரத்திற்கு எறிந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் நெல்லியடி மகாவித்தியாலய மாணவன் எஸ்.நிதுசாந் 9.81 மீட்டர் தூரத்திற்கு எறிந்து 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.









