ராம்குமார் சட்டையில் சுவாதியின் ரத்தம் : காவல்துறை தகவல்!!

620

Swathi Ramkumar

சுவாதி கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சுவாதியின் ரத்த மாதிரிகள், ராம்குமார் விட்டுச் சென்ற ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் ரத்தக்கறை படிந்த அவரது சட்டை ஆகியவை இந்த வழக்கில் முக்கிய தடயங்களாக உள்ளன.

இவை அனைத்தையும் ரசாயன மற்றும் தடயவியல் பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர். இந்த தடயவியல் அறிக்கை சோதனையின் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், ராம்குமார் அணிந்திருந்த சட்டையில் படிந்து இருந்தது சுவாதியின் ரத்தமே என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டி.என்.ஏ சோதனையில் சுவாதியின் ரத்தம் என்பது உறுதியானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் சட்டையை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.