பியர் குடித்துக் கொண்டே உயிருடன் உள்ள சுண்டெலியை ருசித்து சாப்பிடும் இளைஞரின் வீடியோ வெளியாகி சமூக விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விலங்குகளை துன்புறுத்தும் வகையிலான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சமூக விலங்கு நல ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வகையில், ஒரு இளைஞர் பியர் அருந்திக் கொண்டே அதற்கு சைடிஷ் ஆக உயிருடன் உள்ள சுண்டெலியை குச்சியால் குத்தி சாப்பிடுவதும், பின்பு அருகில் வைக்கப்பட்டிருக்கும் சோயா மொச்சை குழம்பை ருசித்து குடிப்பதும் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இது சீனாவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு சமூக விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.