வவுனியா மகா வித்தியாலயத்தில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!!

517

 
தேசிய ரீதியில் நடைபெற்ற பல்துறைசார் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (20.07.2016) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் மரியநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

ஒலிம்பியாட் விஞ்ஞான, கணிதப்போட்டிகள், கவிதை, கட்டுரை, புகைப்படக்கலை, சித்திரம் போன்ற தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 24 மாணவர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், வலயக்கல்விப் பணிமனையின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மாகாண, தேசிய மட்டத்தில் சாதனைகளை நிலைநாட்டுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பாடசாலையின் பழைய மாணவருமான டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 IMG_8536 IMG_8544 IMG_8572 IMG_8589 IMG_8591 IMG_8616 IMG_8631 IMG_8643 IMG_8735