வவுனியா கண்டி வீதியிலிருக்கும் சனச வங்கியின் ஊழியர்கள் இன்று(21.07.2016) பிற்பகல் உணவு வேளையில் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனச வங்கியின் உதவிப் பொதுமுகாமையாளரை பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
வங்கி ஊழியர் சங்கம் இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்டவரை பணியில் இணைத்துக் கொள்ளுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் உணவு வேளையில் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.