நொடிப் பொழுதில் பாலத்தில் மோதி சிதறிய விமானம்!!

303

china-airlines-boeing-b737-800-b18616-flight-ci120-
சீனாவில் நேற்று ஆம்பியான் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் அரசு விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி. ஐ.சி ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம் புதியதாக நீரிலும், ஆகாயத்திலும் செல்லக்கூடிய விமான சேவையை தொடங்க திட்டமிட்டிருந்தது.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் முடிந்து கிழக்கு சீனாவில் இந்த விமானத்தின் சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.இதன்படி, நேற்று விமானத்தின் சேவையை தொடங்கி முதல் ஆம்பியன் விமானம் ஷாங்கயின் ஜின்ஷான் மாவட்டத்திலிருந்து ஜெஜியாங் மாகாணம் ஜோஷான் நகருக்கு 10 பேருடன் புறப்பட்டு சென்றது.

அப்போது, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பயங்கரமாக மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.