வவுனியாவில் பல மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்ட இளம் தம்பதியினர் கைது!!

365

Arrest

வவுனியாவில் பல மாதகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வவுனியா சிதம்பரபுரம் பகுதியினை சேர்ந்த 21வயதான இளம் தம்பதியினரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள வீ டொன்றில் இரண்டுக்கு மேற்ப்பட்ட சந்தர்ப்பங்களில் 5 லட்சத்திற்கு அதிகமான நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளதாகவும் இவர்களினால் திருடப்பட்ட நகைகள் அடைவு வைக்கப்பட்டு பணத்தினை பெற்றுள்ளாதகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.