காதலித்த பெண்ணை குத்திக் கொலை செய்த காதலன் : நடந்தது என்ன?

319

Love

மும்பையில் வேறு ஒரு ஆணுடன் ஊர் சுற்றியதால் காதலியை காதலன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பால்கர் மாவட்டம் விரார் மேற்கு கோல்டன் ஓக் பகுதியை சேர்ந்த கின்ஜால்(21) என்பவரும் கொலபாவில் உணவு விடுதியில் பணிபுரியும் தேவேந்திராவும்(23) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற கின்ஜால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

பொலிசார் கின்ஜாலை தேடி வந்த நிலையில் மறுநாள் காலை கோல்டன் ஓக் பகுதியில் உள்ள புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து பொலிசார் கின்ஜாலின் காதலன் தேவேந்திராவை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த திங்கட்கிழமை கின்ஜாலை சந்திக்க தேவேந்திரா அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வேறு ஆணுடன் கின்ஜால் சாலையில் நடந்து வருவதை பார்த்துள்ளார். தான் பலமுறை எச்சரித்தும் வேறு ஆண்களுடன் பழகுவதை கண்டு ஆத்திரமடைந்த தேவேந்திரா கின்ஜாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து கின்ஜாலை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு கோல்டன் ஓக் பகுதியில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.