பொதுமக்களுக்குச் சொந்தமான இடங்களிலும் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி வவுனியா CCTMS பாடசாலைக்கு முன்னால் உள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (22.07.2016) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இப் போராட்டம் ஐனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றது.
வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், வவுனியாவை அடுத்து ஓமந்தையில் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இவ் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.