ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிடுகின்றனர்.
பொதுச்செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. ஐ.நா வின் தற்போதைய பொதுச் செயலர் பான் கீ மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அடுத்த பொதுச் செயலரை 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு தேர்ந்தெடுக்கவுள்ளது.
இப்பதவிக்குப் போட்டியிடுபவர்களில் 8 பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். மேலும் போட்டியாளர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐ.நா வின் பொதுச் செயலராக பெண் ஒருவர் பதவி வகிக்கவில்லை என்பதால், இம்முறை பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.