வவுனியாவில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!!

688

Dead Body

நேற்றைய தினம் (22.07.2016) காலை பாடசாலைக்கு சென்ற சிறுவனை காணவில்லையென பெற்றோரால் தேடப்பட்டு கொண்டிருந்த போதே அதேபகுதியில் இரவு ஒன்பது மணியளவில் கிணறு ஒன்றினுளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு (டிப்போ பின்பகுதி) பகுதியை சேர்ந்த மவிது நின்சர என்ற எட்டு வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்

சடலம் தற்பொழுது வவுனியா பொதுவைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன்  இணைந்திருங்கள்