வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவு இன்றுமுதல்(23.07.2016) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் செயலாளர் த.தர்மேந்திரா தெரிவித்தார்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நன்கொடையினால் புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் அம்புலன்ஸ் சேவை நேற்று வெள்ளிக்கிழமை (22.07.2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திராவிடம் கையளிக்கப்பட்டது.
உடனடி தீயணைப்பு சேவைக்கு 0242225555 மற்றும் 0243245555 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு நகரசபை செயலாளர் தெரிவித்தார்.