இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதவி வகிக்கிறார். இவர் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீனை ஜம்மு காஷ்மீர் அணிக்கான பயிற்சியாளராக வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார்.
இதனையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் அசாருதீன் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது லோக்சபா எம்.பியாக இருக்கும் அசாருதீன் முழு நேரப் பணியாக பயிற்சியாளராக செயற்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.