தலைக்கு பூசும் சாயத்தை குடித்து இலங்கைப் பெண் தற்கொலை!!

526

Dead

தமிழகத்தின் தாரமங்கலத்தில், தலைக்கு பூசும் சாயம் குடித்த இலங்கை தமிழ் பெண் உயிரிழந்துள்ளார்.

தாரமங்கலம் அடுத்த, பவளத்தானூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் பவித்ரா (17). பிளஸ் 2 முடித்துள்ளார்.

அவரது குடும்பத்தில் உள்ள பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த, 14ம் திகதி, தலைக்கு பூசும் சாயத்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா, நேற்று உயிரிழந்தார்.

தாரமங்கலம் பொலிசார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.