சீனாவில் பலத்த மழை : 80 பேர் உயிரிழப்பு, மில்லியன் கணக்கானோர் வௌியேற்றம்!!

659

China

சீனாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 80ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் தமது வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சீனாவின் த்ரீகோர்ஜஸ் அணையின் நீர் மட்டம் 164 மீட்டரை அடைந்துள்ளது. கடுமையான வானிலையால், ஹூபை, லியோனிங், ஹெபெய் மற்றும் ஹெனான் மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.