ஜெர்மனி தாக்குதல் : 10 பேரை சுட்டுக்கொன்ற நபர் 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் எனத் தகவல்!!

543

German

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் 10 பேரை சுட்டுக்கொன்ற நபர் 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக மியூனிச்சில் வசித்து வந்ததாகவும் ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்பட்டிருந்தது. இருப்பினும், பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதின்ம வயது அகதி பவரியா மாகாணத்தில் ரயிலில் மக்களை ஒரு கோடாரி மற்றும் கத்தி கொண்டு தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து மியூனிச்சில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

1

German police officers guard a bar with Eintracht supporters in the city center in Darmstadt, Germany, Saturday, April 30, 2016. The supporters were banned from the German Bundesliga soccer match between Darmstadt 98 and Eintracht Frankfurt due to misbehavior in the first leg match. (AP Photo/Michael Probst)

3