உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை!!

885

baby

ஆக்ராவில் ஆறு வயது பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தாரியா கிராமத்தை சேர்ந்த வினோத் சிங் என்பவர், நேற்றிரவு தனது பெண் குழந்தை தானு பாகலுடன் வீட்டு வராண்டாவில் தூங்கிகொண்டிருந்துள்ளார்.

காலையில் கண்விழித்து பார்த்தபோது, தனது மகளை காணவில்லை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், குழந்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆடு மாடுகளை மேய்க்க சென்ற நபர், குழந்தை ஒன்று புதைக்கப்பட்ட நிலையில், தலை மற்றும் கால் வெளியில் தெரிந்தபடி மயங்கி கிடந்துள்ளதை பார்த்து மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, மனநலம் சரியில்லாத நபர் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.