முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மட்டுப்படுத்தப்படுகின்றது!!

835

Auto

நாட்டில் முச்சக்கர வண்டிகள் 15 இலட்சமாக அதிகரித்துள்ளதால் முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களின் நன்மை கருதி அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆசனப்பட்டியை கட்டாயமாக்குவதற்கான சட்டமூலமானது எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் தேசிய சபைக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டீ சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் தற்சமயம் பாவனையிலுள்ள முச்சக்கரவண்டிகளில் பெரும்பாலானவை தொழிநுட்ப கோளாறுகளுடனே பயணிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.