சேரன் மகள் மனமாற்றத்திற்கு காரணம் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படமா?

334

dhamini

காதல் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்த்து மனம் திருந்தி பெற்றோருடன் செல்ல ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் சேரனின் இளைய மகள் காதலித்த விவகாரம் கடந்த சில வாரங்களில் ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக தாமினி சென்னை பொலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார்.

அதில் காதலன் சந்துருவை கொலை செய்வதற்கு சேரன் முயற்சிப்பதாக கூறியிருந்தார். சேரன் மீதான இந்த பரபரப்பான குற்றச்சாட்டை அடுத்து சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த புகாரை கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்துரு மீதே தாமினி புகார் கொடுத்திருந்தார்.

அதில் சந்துருவின் நடவடிக்கை பற்றியும் அவர் தனக்கு தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மனம் மாறிய தாமினி சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தாமினி சேரனுடன் சென்றதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் வீட்டில் 15 நாட்கள் தாமினி இருந்தபோது அவருக்கு பல விதங்களில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படமும் போட்டு காண்பிக்கப்பட்டும் அவருக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் மனம் திருந்திய தாமினி பின்னர் பெற்றொருடன் செல்ல ஒப்புக்கொண்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.