A9 வீதி கொக்காவில் பகுதியில் விபத்து : இருவர் பலி!!

714

 
கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் பலியாகி உள்ளனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதி கொக்காவில் பகுதியில் யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறியரக பேருந்து (மினி பஸ்) ஒன்றும் நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகி உள்ளனர்.

அத்துடன் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சிறியரக பேருந்தின் (மினி பஸ்) சாரதி உறங்கிய காரணத்தினால் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதாலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தின் சாரதி விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததனை அடுத்து குறித்த சாரதியை கிளிநொச்சி பொலிசார் மாங்குளம் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்கள் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான அல்பட் ஜெயக்குமார் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான 23 வயதான பிரஷாந்தினி என்பவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிப்பதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 4 5