சிறப்பு பூஜையினை முன்னிட்டு அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் யாத்திரிகளின் பணம், பெறுமதியான பொருட்கள் மற்றும் தொலைபேசிகளை திருடிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 8 பெண்கள் அடங்குவதாகவும் என்று அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 12 கைப்பைகள், 6 கைத்தொலைபேசிகள், 12 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அடையாள அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் சந்தேகநபர்கள் கிரான்ட்பாஸ், சிலாபம், புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இதில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் குருநாகல், மாத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்,
குறித்த சந்தேகநபர்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறும் மத நிகழ்வுகளை இலக்கு வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் பத்து பேரும் நாளைய தினம் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.