வவுனியா சிந்தாமணி ஆலய வீதியில் இன்று(25.072016) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வாகன சாரதி உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று காலை 7 மணியளவில் பணிக்கு மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த தவசீலன்(34 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சிந்தாமணிகோவில் வீதியிலுள்ள சந்தியில் எதிரே வந்த மோட்டார் கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் காரை செலுத்தி வந்த சாரதியை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.