கிளிநொச்சியில் விபத்து: இளம் கணவன் – மனைவி பரிதாபமாக பலி!!

233

?????????????????????????????????????????????????????????

கிளிநொச்சி – கொகாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்சுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதான கணவன் மற்றும் 23 வயதான அவரது மனைவியுமே பலியாகியுள்ளனர்.

மேலும், இவர்களது இரண்டு வயதான குழந்தை சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.