பெண் புகைப்பட நிரூபர் பலாத்காரத்தைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் மக்கள்!!

360

ind

ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் புகைப்பட நிரூபரின் பாலியல் பலாத்காரத்தைத் தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியைப் ஏற்படுத்திள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் டெய்னிக் ஆஜ் நாளேட்டில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் ராகேஷ் ஷர்மா(வயது 50).
இவர் தனது பணியை முடித்து வீடு திரும்பிய பின்னர் தொலைபேசி அழைப்பு வந்ததால் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் புறப்படத் தயாரானார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவாகியது. இதைத் தொடர்ந்து ராகேஷ் ஷர்மா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ராகேஷ் ஷர்மா ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரை சுட்டது யார் என்பது குறித்து உத்தரப்பிரதேச பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை பெண் புகைப்பட நிரூபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் மற்றொரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.