ஜார்கண்டில் சிறுவன் ஒருவனுக்கு 6 வருடமாக நாய் பால் கொடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் தனாபாத் பகுதியில் சுபேந்திர சிங்- பிங்கி குமாரி ஆகிய தம்பதியினர், சாலையோரமாக பழரசக் கடை ஒன்று நடத்தி வருகின்றனர். இவரது மகன் மோகித் குமாருக்கு (10), அவன் நான்கு வயது இருக்கும்போது , அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது.
இந்த சம்பவம் இவரது பெற்றோர்களிடையே பயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சிறுவன் பக்கத்து குடியிருப்பில் உள்ள ஒரு நாயிடம் பால் குடிப்பதற்கு முயன்றுள்ளான், அப்போது அந்த நாய் மோகித்தை கடித்து விட்டது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, நாய் கடித்ததற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் நாயிடம் பால் குடிக்கும் செயலுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து மருத்துவரிடம் வினவிய போது, நாய் பால் குடிப்பதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால் தொற்றுநோய் பரவும் ஆபத்து தான் உள்ளது எனக் கூறியுள்ளார்.