வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவருக்கு பலவந்தமாக முத்தமிட்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை யாழ். தெல்லிப்பளை மணல்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்த சந்தேகநபரை மல்லாகம் மாவட்ட பதில் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலை படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன், பிரதி சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.






