வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள்,காணொளிகள்)

738

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் இரண்டாம்  நாள் நிகழ்வுகள் நேற்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்) சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக தி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்) , கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி- தே.க.கல்லூரி வவுனியா), ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கிராமப்புறப் பாடசாலைகளில் இன்று முன்னணியில் திகழும் வவுனியா புதுக்களம் மகா வித்தியாலயம்பற்றிய மற்றும் தொலைந்துபோன கிராமப்புறப் வாழ்கைமுறை என்பன தொடர்பாக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கு. சிதம்பரநாதன் அவர்கள் உரையாற்றினார் .

நேற்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகளில் மூன்றுவருடங்களுக்கு ஒருமுறை வெளிவரும் அறிவொளி என்னும் நூல் இம்முறை நூற்றாண்டு மலராக வெளிவந்து அந்த நூல்வெளியீட்டு வைபவமும் சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நூலுக்கான மதிப்பீட்டு உரையை தமிழருவி சிவகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார்.

பாடசாலையின் வளர்ச்சியில்அயராது உழைத்த மறைந்த முன்னாள் அதிபர் திரு. சற்குணசிங்கம் அவர்களை கல்மடு செல்வதேவன் அவர்கள் நினைவு கூர்ந்த நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து பாடசாலையில் பதினெட்டு வருடங்கள் தொடர்ச்சியாக அதிபராக கடமையாற்றி பாடசாலையை தரமுயர்த்துவதிலும் யுத்தகாலங்களில் பாடசாலையை பாதுகாப்பதிலும் முன்னின்று உழைத்தவரும் தற்போதைய வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபருமாகிய தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மிக உணர்ச்சி பூர்வமாக பாடசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட துன்ப துயரங்களை பற்றியும் உரையாற்றினார்.

தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அந்திய துணைதூதுவர் ஆர்.நடராஜன் அவர்கள் பாடசாலையின் நூற்றாண்டினை முன்னிட்டு அமைக்கபட்ட நினைவு சின்னதாய் திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வன்னிப்பாரளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண சுகாதார அமைச்சர் ப .சத்தியலிங்கம் மற்றும் முன்னால அதிபர்களில் ஒருவரான வையாபுரிநாதன் ஆகியோரது உரைகள் இடம்பெற்றதுடன் கல்வி மற்றும் இணைபாட விதான செயல்பாடுகளில் பாடசாலையின் வளர்ச்சியில் அயராது உழைத்த மாணவர்கள் பெரியோர்கள் மற்றும் ஊரவர்கள் ஆகியோர் கௌரவிக்கபட்டனர் .

நிகழ்வின் இறுதியில் வவுனியா கோவில்குளம் அருளக நுண்கலை கல்லூரி மற்றும் நிருத்திய நிகேதன நுன்கலைகல்லூரி என்பவற்றின் மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்வுகள் சூரிய யாழினி வீரசிங்கத்தின் நெறியாள்கையில் இடம்பெற்றது.

இரண்டு  நாள்  நிகழ்வுகளும் முதன் முறையாக  வவுனியா நகருக்கு வெளியே புதுக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நெற் இணையத்தினூடாக  நேரடி ஒளிபரப்பு   செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது. நிகழ்வுகளை இணையத்தில் பார்க்க !! இங்கே இணைப்பை கிளிக் செய்து  எமது  YOUTUBE CHANNAL  பார்க்க முடியும்!

DSC_0135 DSC_0136 DSC_0137 DSC_0139 DSC_0134 DSC_0133 DSC_0132 DSC_0131 DSC_0130 DSC_0129 DSC_0128 DSC_0126 DSC_0123 DSC_0122 DSC_0120 DSC_0119 DSC_0117 DSC_0113 DSC_0112 DSC_0111 DSC_0109 DSC_0103 DSC_0102 DSC_0101 DSC_0100 DSC_0099 DSC_0097 DSC_0096 DSC_0095 DSC_0094 DSC_0093 DSC_0090 DSC_0089 DSC_0088 DSC_0087 DSC_0084 DSC_0083 DSC_0082 DSC_0081 DSC_0080 DSC_0078 DSC_0077 DSC_0076 DSC_0005 DSC_0004 DSC_0003 1 (17) 1 (16) 1 (15) 1 (14) 1 (13) 1 (12) 1 (11) 1 (10) 1 (9) 1 (8) 1 (7) 1 (2) 1 (1)