சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நாளை மதியம் 12.00 மணியளவில் சிவஸ்ரீ. சதா.சங்கரதாஸ் சிவாச்சாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி உற்சவத்தில்
கொடியேற்றம் 27.07.2016 புதன்கிழமையும்
ஆடி அமாவாசை -02.08.2016 செவ்வாய்க்கிழமையும்
சப்பர திருவிழா -03.08.2016 புதன்கிழமையும்
தேர்த்திருவிழா -04.08.2016 வியாழக்கிழமையும்
தீர்த்த திருவிழா -05.08.2016 வெள்ளிகிழமையும் இடம்பெறும்!