
மும்பையில் 13 வயது சிறுமி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவள் அளித்துள்ள புகாரில், Lachharam Kriparam Chaudhary(35) என்ற நபர், எனது தந்தையிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து என்னை விலைக்கு வாங்கிகொண்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை திருமணம் செய்துகொண்ட அவர், ஒரு வருடமாக என்னை சித்ரவதை செய்து வருகிறார், பாலியல் தொல்லை கொடுப்பது, அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்றால் அடித்து கொடுமைபடுத்தினார் என்று பொலிசாரிடம் கூறிய அச்சிறுமி, தனது உடலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார்.
புகார் பதிவானதும் உடனே செயல்பட்டு விரைந்து சம்பந்தப்பட்ட Lachharam Kriparam Chaudhary கைது செய்து விசாரித்துள்ளனர், விசாரணையில் அவர் கூறியது, அப்பெண் மீது எனக்கு முழு உரிமையும் உள்ளது.ஏனெனில், ஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் ரங்கம் என்ற இடத்திலிருந்து அவள் பெற்றோரிடமிருந்து 6.3 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியதோடு மட்டுமல்லால் அதற்கான பத்திரத்தையும் பொலிசாரிம் காட்டியுள்ளான்.
அந்த பத்திரத்தில் அச்சிறுமியின் வயது 20 என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது மருத்துவ சோதனைக்கு உட்படுத்த அச்சிறுமியின் தற்போதைய வயது 14 என தெரியவந்துள்ளது, மேலும் Chaudhary மீதும், பல்வேறு கற்பழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.





