வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!

350

sampanthan

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவ்வாறு வெற்றிபெற்றால்தான் தமிழ் மக்கள் ஒரு கணிசமான சுயாட்சியைப் பெற்று தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுதந்திரமாகவும் கௌரவத்துடனும் தங்களுடைய நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி வாழ விரும்புகிறார்கள் என்ற செய்தியை நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக்கும், ஏனைய மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நாங்கள் தெளிவாக கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.