விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் கைது..!!

408

pro

கொழும்பு புறநகர் பகுதியான சீதுவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 37 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேர விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதமன்ற உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.