சற்றுமுன் வவுனியா நெளுக்குளம் குளுமாட்டுச் சந்தியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
நெளுக்குளத்திலிருந்து தனது குடும்பத்துடன் வீடு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை குளுமாட்டுசந்தியில் திருப்பும் போது தடம்புரண்டதில் முச்சக்ரவண்டியின் உரிமையாளரின் 6 மாதக் குழந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.















