யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடம் அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
12 அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ரீதியில் புலி முகவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தகவல்களை வழங்க புலிச் சந்தேக நபர்கள் இந்த செய்மதி தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொலைபேசிகளைப பயன்படுத்தி நவனீதம்பிள்ளையுடன் தொடர்புகொள்ள கைதிகள் திட்டமிட்டிருந்தனர்.
வெலிக்கடை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை நவனீதம்பிள்ளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.