சகோதரியை துஷ்பிரயோகப்படுத்திய இரண்டு சகோதரர்களுக்கு விளக்கமறியல்!!

1088

Arrest

தமது இளைய சகோதரியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு சகோதரர்களை விளகக்மறியலில் வைக்குமாறு காலி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹபராதுவை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 17 வயதை அடைந்துள்ள குறித்த சிறுமி இது தொடர்பில் அண்மையில் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

சிறுமியின் முறைப்பாட்டுக்கு அமைய ஹபராதுவ பொலிஸாரும், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சபை அதிகாரிகளும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

21 மற்றும் 26 வயதான குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் காலி மேல்நீதிமன்றில் இன்று முன்னிலை படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இந்த துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்ற போது சிறுமிக்கு 14 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.