வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலமோட்டை மூன்று முறிப்பு வீதியின் வேலைத்திட்டங்களை நேற்று முன்தினம் (25.07.2016) திங்கள் மாலை 5.30 மணியளவில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்.
இவ் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2016 (PSDG) வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சுமார் 6.7 மில்லியன் நிதியில் வீதி செப்பனிடும் பணிகள், தாரிடுதல் மற்றும் 04 மதகுகள் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் டி.சிவராசலிங்கம், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மன்னார் மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன் ஆகியோரும் அக்கிராமத்து அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.















