வவுனியா ஓமந்தையில் வீதி புனரமைப்பு பணிகள் : ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்!!

513

 
வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலமோட்டை மூன்று முறிப்பு வீதியின் வேலைத்திட்டங்களை நேற்று முன்தினம் (25.07.2016) திங்கள் மாலை 5.30 மணியளவில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்.

இவ் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2016 (PSDG) வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சுமார் 6.7 மில்லியன் நிதியில் வீதி செப்பனிடும் பணிகள், தாரிடுதல் மற்றும் 04 மதகுகள் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் டி.சிவராசலிங்கம், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மன்னார் மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன் ஆகியோரும் அக்கிராமத்து அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

1 13614945_10209918584270374_491784250359337335_n 13620797_10209918589070494_970406800039537613_n 13626635_10209918586390427_3347669032087986302_n 13631457_10209918581910315_7123286473250312323_n 13658945_10209918583190347_8309958720680027372_n 13669549_10209918583310350_6545349783736844055_n 13669608_10209918582830338_4276264018661814836_n 13680992_10209918585350401_4192506668165354105_n 13729032_10209918581790312_3669886533714928858_n