ஐக்கிய அரபு இராட்சியத்தில் அடிமை தொழிலாளர்களாக்கப்படும் இலங்கையர்கள்!!

306

12335

ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் செல்லும் இலங்கையர்களை கட்டாயப்படுத்தி அந்நாட்டில் அடிமை தொழிலாளர்களாகப்படுவதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய வலய நாடுகளை சேர்ந்த இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் வறுமையின் நிமிர்த்தம் தொழிலிற்காக அதிகமானோர் செல்லும் நாடாக மத்திய கிழக்கின் ஐக்கிய அரபு இராச்சியம் விளங்குகின்றது.

அண்மையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் 100 இற்கும் மேற்பட்ட ஆசிய வலய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் காலாவாதியான விசாக்கள் மூலம் பணிபுறிவதாகவும் மேலும் இவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதோடு தொழில் முகவர்கள் இவர்களின் விசாக்களை புதிப்பிக்க மறுத்து வருகிறமையால் தங்களால் தங்களின் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தொழிலாளர்கள் தம்நாட்டு அரசாங்கத்திடம் உதவிகளை கோறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.