வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் கைதாகி பிணையில் விடுதலை!!

371


TNA-logo

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் இ.இந்திரராஜாவின் ஆதரவாளர்கள் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..



நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 1ல் போட்டியிடும் ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் இ.இந்திரராஜா அவர்களின் ஆதரவாளர்கள் மூவர் வவுனியா ஈச்சங்குளப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது ஈச்சங்குள பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை தொடர்ந்தும் தடுத்துவைத்துள்ளனர்.