வெல்லவாய – பலஹருவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியொருவர் நேற்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
காட்டு யானைகளின் தாக்குதல்களால் இரண்டு மாதங்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதனால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.






