கண்டி பல்லேகல மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய அவுஸ்திரேலிய பொதுமகன் ஒருவருக்கு ஒருவாரக்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது மழைக்காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்ட வேளையில் குறித்த பொதுமகன் மைதானத்துக்குள் நிர்வாணமாக ஓடியுள்ளார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது அவருக்கு 3ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்த நீதிவான், ஒருவார சிறைத்தண்டனையும் விதிதிள்ளார்.







