நேபாளத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் காத்மாண்டில் வீடு இடிந்து வீழ்ந்ததில் 2 குழந்தைகள் இறந்துள்ளன.
28 பேர் காணாமற்போயுள்ளதுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மீட்புக் குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 9000 பேர் உயிரிழந்தனர். இதில் வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் இன்னும் குடிசைகள் மற்றும் கூடாரங்களிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






