வவுனியா குருமன்காட்டில் நேற்று(28.07.2016) இரவு 9 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கற்களை ஏற்றிய டிப்பர் வாகனம் குருமன்காடு வயல்வெளிக்கு அண்மையில் தரிக்க முற்பட்ட சமயத்தில் வீதியின் அருகே புதையுண்டு விபத்துக்குள்ளானது
இந்த வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதி திருத்தவேலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




















