சிம்பு-தனுஷ் சமீப காலமாக தான், தங்களை நண்பர்களாக காட்டி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் படங்கள் ஒரே நாளில் மோதி பல வருடங்கள் ஆகின்றது.
மாரி, வாலு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுவதாக இருந்து பின் தள்ளி வைக்கப்பட்டது, ஆனால், இந்த முறை இருவரும் கண்டிப்பாக மோதும் வாய்ப்பு அமைந்துள்ளது.
சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா, தனுஷ் நடித்த தொடரி ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ஆகஸ்ட் மாதத்தில் வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இதனால், ஏதாவது ஒரு படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.






