ஒரு பாட்டுக்காக 2.5 லட்சத்துக்கு பூ வாங்கிய தயாரிப்பாளர்..!!

325

poo

கழுகு படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா தற்போது நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். மோனல் கஜ்ஜார் ஜோடியாக நடிக்கிறார். ராஜமோகன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் திருமண பாடல் ஒன்று அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில் படமாக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் இப்பாடலை எடுத்துள்ளனர். திருமண மண்டபத்தை அலங்காரம் செய்வதற்காக ஒருநாளைக்கு பூ மட்டும் 50 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர். மொத்தம் 5 நாட்களுக்கு இரண்டரை லட்சத்துக்கும் மேல் பூவுக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள். மேலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்க சம்பளம், பேட்டா என தனியாக 25 லட்சம் செலவழித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ராஜமோகன் கூறும்போது, இப்பவும் கிராமத்து திருமணங்களில் வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ என்ற பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ஒலித்துக் கொணடிருக்கிறது. வானவராயன் வல்லவராயன் படம் வெளிவந்த பிறகு இந்த படத்துல வர்ற “வாங்கம்மா வாங்கப்பா வாங்கண்ணே வாங்கத்தே” என்று உறவுகளை கூறி அழைக்கும் இந்த பாட்டுதான் ஒலிக்கும். சினேகன் எழுதியுள்ள இந்த பாட்டு நிச்சயம் பட்டையை கிளப்பும் என்று கூறினார்.