உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இந்தோனேசியா!!

278

1

சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம் ஆண்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்படும்.

இதனை தொடர்ந்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர், செனகல் நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தோனேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் என 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.

இந்தோனேசியாவின் இந்த முடிவுக்கு சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்பும் பிற நாடுகளும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தின.

ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி இந்தோனேசிய அரசு இன்று அதிகாலை 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ஜாவாவில் உள்ள Nusakambangan பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகள், துணியால் கண்கள் மூடப்பட்ட அவர்களை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கும் 33 நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2 3