இளம் யுவதி துஷ்பிரயோகம் : குடும்பஸ்தர் கைது!!

297

Abuse

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்து வரும் நிலையில், யுவதி உறவினர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ள நிலையில் யுவதியின் சித்தப்பாவினால் கடந்த இரு வருடங்களாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.