மூன்று வயது குழந்தை ஒன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் இன்று காலை மாரவில, குருசபல்லிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தினர் வீட்டில் இருந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குழந்தை வீட்டின் பின்புறமாக கடலிற்குச் சென்றுள்ளது. இதன்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மாரவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.