ஆண் குழந்தை பெற 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த 55 வயது நபர்!!

305

forced-marriage_1748513c

பாகிஸ்தானில் ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது அலி (55). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.இவருக்கு ஆண் குழந்தை இல்லை. எனவே வேறு ஒரு இளம்பெண்ணை மணந்து அவர் மூலம் ஆண் குழந்தை பெற முடிவு செய்தார்.

எனவே லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பேகம் பீபி என்ற 20 வயது பெண்ணை 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கினார். பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்து சீசாவாடனில் தனியாக குடிவைத்தார்.

இவர்களது திருமணம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்தது. அதை தொடர்ந்து அவர் அப்பெண்ணுக்கு கடுமையான செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். மேலும், அவரை அடித்து கொடுமைப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் அவசர பொலிஸ் உதவியை நாடினார். உடனே பொலிசார் விரைந்து வந்து இளம் பெண்ணை திருமணம் செய்த முகமது அலியை கைது செய்தனர்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் எனது 2வது மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்று தந்தவுடன் அவரை விட்டு விடுவதாக கூறி இருக்கிறேன்.அதன்படி அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றவுடன் அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றார். அதை ஏற்காத பொலிசார் பேகம் பீபியை மீட்டனர்.