​மோதரையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

902

Gun

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

30 வயதுடைய நிரோஷன் சுரேன் பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் 2014ம் ஆண்டு கிரேண்பாஸில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகபர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.